Thursday, August 25, 2011

FOOD BALL CAPTIAIN பாய்ச்சுங் பூட்டியாவிடை பெற்றார்

புது தில்லி, ஆக.24: இந்திய கால்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான பாய்ச்சுங் பூட்டியா ஓய்வுபெற்றார். 34 வயதான இவர், 16 ஆண்டு காலம் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர். 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.

 கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தில்லியில் உள்ள அகில இந்திய கால்பந்து சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 இந்திய அணிக்காக கால்பந்து விளையாடிய 16 ஆண்டு காலம் அற்புதமானவை. இந்தியாவுக்காக பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றது, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்றது ஆகியவை எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்கள்.
             வருங்கால கால்பந்து வீரர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்றார். 2014 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும் அணியில் இருந்து பாய்ச்சுங் பூட்டியா ஏற்கெனவே நீக்கப்பட்டார்.

                கடந்து வந்த பாதைகள்... 1976-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிக்கிமில் பிறந்தார் பூட்டியா. 1995-ம் ஆண்டு தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 43 கோல்களை அடித்துள்ளார்.

 சர்வதேச அளவில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே இந்தியர். இவரது தலைமையிலான இந்திய அணி தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறையும், நேரு கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றுள்ளது. 1984-க்குப் பிறகு இந்திய அணியை ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற வைத்த பெருமையும் இவரையேச் சாரும். கால்பந்து போட்டியில் பூட்டியாவின் அளப்பரிய பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் அவருக்கு அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது ஆகியவை வழங்கப்பட்டன. நட்சத்திர வீரரான பாய்ச்சுங் பூட்டியாவின் ஓய்வு இந்திய கால்பந்து அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

  COURTESY :DINAMANI

Friday, August 19, 2011

UNDERWATER POST OFFICE

Vanuatu Post Limited was formed in 2000 and provides postal and other services to residents and visitors to Vanuatu. The Corporation is owned by the Government of Vanuatu and operates as a commercial enterprise.
About Vanuatu


            Vanuatu or the Republic of Vanuatu is an island nation located in South Pacific Ocean. Geographically Vanuatu is located in-between the Coral Sea and the South Pacific Sea. Vanuatu, an archipelago consists of close to 82 small sized islands of volcanic origin. 65 out of 82 islands are inhabited.  This irregular Y shaped chain of 82 islands; with a total area of 4,710 sq miles have a total coastline of 1,571 miles. This 500 miles long island chain lies 600 miles to the west of Fiji and 250 miles to the northeast of New Caledonia. Vanuatu location map indicates the exact location of Vanuatu in the world map. Vanuatu location map shows that the Vanuatu is a part of Oceania and is about three quarters of the way from Hawaii to Australia. Inset on the Vanuatu location map shows the cluster of islands which are a part of Republic of Vanuatu.


LIST OF POST OFFICES FOR ATM INSTALLATION

 It is proposed to introduce the segments of Core Banking Solution relevant to Post office Savings Bank Scheme (POSB) in 2207 departmental post offices initially.
                                 The Government proposes to provide ATM facility in 810 Post offices. The State-wise details are as under.


Source : pib

INDIA POST WINS AWARD FOR BEST CUSTOMER SERVICE ORG-2011

GILL INDIA COMMUNICATIONS
PRIVATE LIMITED              

 Today's traveller


Ms. Radhika Doraiswamy
Secretary
Department of Posts, Govt. of India
Dak Shawan, Sansad Marg
New Delhi - 110001
                                                            August 4, 2011

Sub:    India Post wins Today's Traveller Award for Best Customer Service   Organization 2011

Dear Ms. Doraiswamy,

            Today's Traveller, the premier business & leisure travel magazine, takes greatpleasure in inviting you to its 14th Anniversary celebrations on 23rd August 2011 Tomark this milestone, a special coffee-table book - Today's Traveller- In Pursuit ofExcellence will be released at a launch event.


            As part of this august event, the fifth edition of the Today's Traveller Awards to recognise and honour outstanding performers in the corporate, travel and tourism sector will be distributed.

            We are glad to inform you that India Post has been awarded the Today's Traveller Award for Best Customer Service Organization 2011.

             Hon'ble Minister for Tourism Mr. Subodh Kant Sahai has very graciously consented to honour the event and give away the awards.

            We would appreciate it greatly if you would grace the event and receive the award personally. We await your confirmation.

            The ceremony will be held at The Taj Palace Hotel, Sardar Patel Marg, New Delhi on Tuesday, the 23rd August 2011 at 6.00 pm. Detailed programme will follow.

With best regards,

Kamal Gill (Sd/-)
Executive Editor & Managing Director
Gill India Communications Pvt Ltd
M: +91 9899553300


Courtesy : http://nfpe.blogspot.com/

Saturday, July 30, 2011

தமிழர் கட்சி வெற்றி: ராஜபக்ஷேவுக்கு பின்னடைவு

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில், ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் அவரது கட்சி தோல்வி அடைந்தது, பெரிய பின்னடைவதாகவே கருதப்படுகிறது.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப் போரால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவில்லை. குறிப்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 65 உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் அமைதியாக நடந்தது.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வடக்கு மாகாணத்தில், 18 இடங்கள், தமிழ் தேசியக் கூட்டணி வசம் வந்தன. தமிழ் தேசியக் கூட்டணிக்கு எதிராக செயல்படும், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, வடக்குப் பகுதியில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி, படு தோல்வி அடைந்திருப்பது, இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Saturday, July 23, 2011

இலங்கைக்கான நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது. இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் "சேனல் 4' செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், இக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவளித்தன. இந்நிலையில், 2010ம் நிதியாண்டில் இலங்கைக்கு 13 மில்லியன் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டது. அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்த போது, முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்த, தனது கவலையைத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என, ஹிலாரி உறுதியளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி, மனித உரிமை மீறல் விவகாரத்தின் அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்த போது, "சேனல் 4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் எம்.பி.,களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
இந்தத் தடையை வரவேற்றுள்ள பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, 2009 போர் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு என, திட்டவட்டமாகத் தெரிவித்தது. இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்; காணாமல் போன பத்திரிகையாளர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். இவற்றில் இலங்கை அரசின் நேர்மையான செயல்பாடுகளை ஒபாமா அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அமெரிக்கா தனது நிதியுதவியை மீண்டும் வழங்கும். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது.

courtesy: dinamalar
Related Posts Plugin for WordPress, Blogger...