Monday, June 27, 2011
Sunday, June 26, 2011
Annual Increase in Pay - First day of July
Monday, June 20, 2011
அமர்நாத் குகை கோவிலில் 18 அடியில் பனிலிங்கம்!
பகல்காம் : காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அமர்நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற்கை பனிலிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரைவில் தொடங்க உள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழியாகவும் செல்லலாம். பக்தர்கள் எளிதாக யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த இருவழிகளையும் சீர்படுத்தும் பணிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக, மாநில போலீசாரும், 50 கம்பெனி துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
Tuesday, June 7, 2011
இந்திய அஞ்சல் துறையுடன் கைகோர்த்தது பிஎஸ்என்எல்
வங்கிச் சேவை இல்லாத கிராமங்களில் பணப் பரிமாற்ற சேவை விரைவில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய அஞ்சல்துறை, பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் கைகோர்க்கிறது. இந்த நடமாடும் பணப் பரிமாற்ற சேவையை, சண்டிகாரில் மத்திய உள்தறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு இணையமைச்சர் குருதாஸ் காமத் துவக்கி வைத்தார். இதவர், சண்டிகாரிலிருந்து, பீகாரின் பாட்னாவில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறவனத்திற்கு இந்த சேவையின் மூலம் ரூ. 1000 பரிமாற்றம் செய்து சேவையை துவக்கி வைத்தார். இந்திய அஞ்சல் துறையின் டைரக்டர் ஜெனரல் ராதிகா துரைசாமி கூறியதாவது, எலெக்ட்ரானிக் மனி ஆர்டர் மற்றும் இன்ஸ்டெண்ட் மனி ஆர்டர் உள்ளிட்ட இணையதள அடிப்படையிலான பணப் பரிமாற்ற சேவைகள் இருந்தாலும், தற்போது துவங்கி உள்ள சேவை மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெறும். ஏனெனனில்,. தற்போது அனைவரிடத்திலும் மொபைல் போன் காணப்படுகிறது. நாடு முழுவதும் 1,55,000 தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சேவை மூலம், பணப் பரிமாற்றங்கள் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், மனி ஆர்டருக்கான கமிஷனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)