Sunday, August 28, 2011

உண்ணாவிரதம் முடித்த அன்னா ஹசாரே அறிவிப்பு:அடுத்து என்ன?

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக, வரலாறு படைத்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின், 12 நாள் உண்ணாவிரதம், "வந்தே மாதரம், பாரத் மாதாவுக்கு ஜே' என்ற உரத்த கோஷங்களுக்கு இடையே, நேற்று காலை, 10.20 மணிக்கு, டில்லி ராம்லீலா மைதானத்தில் முடிந்தது. "அடுத்ததாக, தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போராடுவேன்' என, அன்னா ஹசாரே கூறினார். மேலும் ஒரு மாத காலத்தில், பார்லிமென்டின் விசேஷ கூட்டத் தொடர் கூட்டப்பட்டு, பலமான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும், ஹசாரே குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
பார்லிமென்டில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த, 12 நாட்களாக, காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமானால், மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஹசாரே வலியுறுத்தினார். "அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்' என்ற, அந்த மூன்று கோரிக்கைகளையும், அரசு ஏற்றுக் கொண்டது.


இது தொடர்பாக, நேற்று முன்தினம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம், அன்னா ஹசாரேக்கு கொடுத்தனுப்பினார். இதைத் தொடர்ந்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள, அன்னா ஹசாரே முடிவு செய்தார்.இதன்படி, நேற்று காலை, சிம்ரன், இக்ரா என்ற இரு சிறுமிகள், தேன் கலந்த இளநீரை, கோப்பையில் கொடுக்க, அன்னா ஹசாரே மகிழ்ச்சியுடன் அதை குடித்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.


இதன்பின், தன் ஆதரவாளர்களிடையே அன்னா ஹசாரே பேசியதாவது:நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்ற, பார்லிமென்டிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பார்லிமென்ட் ஒரு அமைப்பு என்பதை நான் மதிக்கிறேன். ஆனால், பார்லிமென்டை விட, அதை தேர்ந்தெடுக்கும் மக்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதை, அரசியல்வாதிகள் உணர வேண்டும்.டில்லி போன்ற நகரங்களில் அதிகார குவியல் இருப்பதே, ஊழலுக்கு முக்கிய காரணம்.


மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். லோக்சபா, ராஜ்யசபாவுக்கு இணையான அதிகாரங்களை, கிராம சபைகளுக்கு வழங்க முன்வர வேண்டும்.இந்தியாவில் ஏழை, பணக்காரர்கள் இடையே, பொருளாதார வேற்றுமைகள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். தேர்தல் முறைகளில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மக்களுக்கு பணி புரியாத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மக்கள் இதற்காக ஐந்தாண்டுகள் காத்திருக்க முடியாது.


சில மேல்நாடுகளில் இருப்பது போல், "ரைட் டு ரீ கால்' என்ற சரத்து, தேர்தல் சட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.நாங்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்ற உரிமையையும், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்க, ஓட்டுச் சீட்டில் ஒரு இடம் ஒதுக்க வேண்டும். எந்த வேட்பாளர்களையும் விரும்பாத வாக்காளர் அதிகமாக இருந்தால், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்துவிட்டு, மறு தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் நல்ல எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உருவாக்க வாய்ப்பு ஏற்படும்.கல்விக் கூடங்கள் வியாபார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதில் மாறுதல்கள் கொண்டு வர வேண்டும். குடி தண்ணீர், பெட்ரோல், மின்சாரம், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.


இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்தில், இந்த வளங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. நமது சந்ததியினர் எவ்வாறு இந்நிலைமையை சமாளிப்பர் என்ற சிந்தனை நமக்கு வர வேண்டும். விவசாயிகளின் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.வெள்ளைக் குல்லாவை அணிந்தால் மட்டும் காந்தியடிகள் ஆகிவிட முடியாது. அதை போடுபவர்கள், தூய சிந்தனைகளையும், தியாக மனப்பான்மையையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பது தான், என் அடுத்த கோரிக்கை. அதற்காக போராட்டம் நடத்துவேன்.தற்போது, உண்ணாவிரதத்தை முற்றிலும் கைவிடவில்லை. தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்.இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

courtesy:dinamalar

நம் குரலுக்கு உரிய நியாயம் கிடைக்கும் : சீமான்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனைத் தீர்ப்புத் தொடர்பில், நாம் சோர்ந்து போக
தேவயில்லை. நம் குரலுக்கு உரிய நியாயம் கிட்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாலேயே அவர்களின் வாழ்க்கைக்கு முடிவு நிர்ணயிக்கப்பட்டது என்று கருத வேண்டியதில்லை.

இந்த மூவரும் 2000-வது ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தார்கள். அதனை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்த பிறகு ப. சிதம்பரம் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார். இந்த 11 ஆண்டுகளும் அவர்கள் மரண தண்டனை உண்டா, இல்லையா என்ற மனவேதனையிலேயே கழித்திருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரும் அதே மனவேதனையில்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது இந்த மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளார்கள். தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் தாமதித்து நிராகரித்திருப்பது அரசமைப்பு சட்ட ரீதியாக நியாயமற்றது என்று கூறி அவர்கள் வழக்குத் தொடரவுள்ளனர்.

அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிலேவ்ஸ, யுக் மொகித் கவுத்ரி ஆகியோர் ஆஜராக உள்ளனர். அது மட்டுமின்றி குற்றச்செயல் முடிந்த நாள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் மனுவில் தெரிவித்து, 20 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு, இப்போது மரண தண்டனையையும் நிறைவேற்றினால், அது ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டிக்கப்படுவதாகும் என்றும், அது சட்டப்படி நியாயமற்றது என்றும் தங்கள் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

இப்படி கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் வைத்து நிராகரித்த மரண தண்டனை குற்றவாளிகள் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில் அவர்களின் தண்டனையைக் குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு தீர்ப்புகள், இவர்களின் வழக்கோடு தொடர்புடையவையாகும் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பஞ்சாப் முதல்- மந்திரியாக இருந்த பிரதாப்சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தயா சிங் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1972-ம் ஆண்டில் சிறையில் இருந்த இவர் தனது மரண தண்டனையை குறைக்குமாறு கோரி ஆளுநருக்கும், பிறகு குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தார். ஆனால் அவையாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 1991-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ். வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதேபோல் குஜராத்தில் திரிவேணி பென் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமற்றதா என்பதையும், அவ்வாறு காலதாமதம் ஆனதற்கு எந்த விதத்திலாவது குற்றவாளி பொறுப்பாளரா என்பதையும் மட்டுமே சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பளிக்கும் என்று கூறியுள்ளது.

இது மட்டுமின்றி தமிழ் நாட்டு மக்களிடையே நன்கு அறிமுகமான விஷ ஊசி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் வழக்கில் (1983), மரண தண்டனை விதிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாததால் அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

மேற்கண்ட வழக்குகள் அனைத்திலும் காட்டிலும் இந்த மூவர் 11 வருடங்கள், 4 மாதங்கள் கருணை மனு முடிவிற்காக காத்திருந்துள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் மிக மிக காலதாமதமாக அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடைய மரண தண்டனை ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகவே விரைவில் மூவரும் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வழக்குகளில் நமக்கு உரிய நீதி கிடைக்கும். நமது குரலுக்கு உரிய நியாயம் கிட்டும். நாம் சோர்ந்து போகவோ, துவண்டு விடவோ தேவையில்லை என  அவர் கூறியுள்ளார்

Thursday, August 25, 2011

FOOD BALL CAPTIAIN பாய்ச்சுங் பூட்டியாவிடை பெற்றார்

புது தில்லி, ஆக.24: இந்திய கால்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான பாய்ச்சுங் பூட்டியா ஓய்வுபெற்றார். 34 வயதான இவர், 16 ஆண்டு காலம் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர். 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.

 கடந்த ஓர் ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தில்லியில் உள்ள அகில இந்திய கால்பந்து சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 இந்திய அணிக்காக கால்பந்து விளையாடிய 16 ஆண்டு காலம் அற்புதமானவை. இந்தியாவுக்காக பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றது, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்றது ஆகியவை எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்கள்.
             வருங்கால கால்பந்து வீரர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்றார். 2014 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும் அணியில் இருந்து பாய்ச்சுங் பூட்டியா ஏற்கெனவே நீக்கப்பட்டார்.

                கடந்து வந்த பாதைகள்... 1976-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிக்கிமில் பிறந்தார் பூட்டியா. 1995-ம் ஆண்டு தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 43 கோல்களை அடித்துள்ளார்.

 சர்வதேச அளவில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே இந்தியர். இவரது தலைமையிலான இந்திய அணி தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறையும், நேரு கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 2008-ல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை வென்றுள்ளது. 1984-க்குப் பிறகு இந்திய அணியை ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற வைத்த பெருமையும் இவரையேச் சாரும். கால்பந்து போட்டியில் பூட்டியாவின் அளப்பரிய பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் அவருக்கு அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது ஆகியவை வழங்கப்பட்டன. நட்சத்திர வீரரான பாய்ச்சுங் பூட்டியாவின் ஓய்வு இந்திய கால்பந்து அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

  COURTESY :DINAMANI

Friday, August 19, 2011

UNDERWATER POST OFFICE

Vanuatu Post Limited was formed in 2000 and provides postal and other services to residents and visitors to Vanuatu. The Corporation is owned by the Government of Vanuatu and operates as a commercial enterprise.
About Vanuatu


            Vanuatu or the Republic of Vanuatu is an island nation located in South Pacific Ocean. Geographically Vanuatu is located in-between the Coral Sea and the South Pacific Sea. Vanuatu, an archipelago consists of close to 82 small sized islands of volcanic origin. 65 out of 82 islands are inhabited.  This irregular Y shaped chain of 82 islands; with a total area of 4,710 sq miles have a total coastline of 1,571 miles. This 500 miles long island chain lies 600 miles to the west of Fiji and 250 miles to the northeast of New Caledonia. Vanuatu location map indicates the exact location of Vanuatu in the world map. Vanuatu location map shows that the Vanuatu is a part of Oceania and is about three quarters of the way from Hawaii to Australia. Inset on the Vanuatu location map shows the cluster of islands which are a part of Republic of Vanuatu.


LIST OF POST OFFICES FOR ATM INSTALLATION

 It is proposed to introduce the segments of Core Banking Solution relevant to Post office Savings Bank Scheme (POSB) in 2207 departmental post offices initially.
                                 The Government proposes to provide ATM facility in 810 Post offices. The State-wise details are as under.


Source : pib

INDIA POST WINS AWARD FOR BEST CUSTOMER SERVICE ORG-2011

GILL INDIA COMMUNICATIONS
PRIVATE LIMITED              

 Today's traveller


Ms. Radhika Doraiswamy
Secretary
Department of Posts, Govt. of India
Dak Shawan, Sansad Marg
New Delhi - 110001
                                                            August 4, 2011

Sub:    India Post wins Today's Traveller Award for Best Customer Service   Organization 2011

Dear Ms. Doraiswamy,

            Today's Traveller, the premier business & leisure travel magazine, takes greatpleasure in inviting you to its 14th Anniversary celebrations on 23rd August 2011 Tomark this milestone, a special coffee-table book - Today's Traveller- In Pursuit ofExcellence will be released at a launch event.


            As part of this august event, the fifth edition of the Today's Traveller Awards to recognise and honour outstanding performers in the corporate, travel and tourism sector will be distributed.

            We are glad to inform you that India Post has been awarded the Today's Traveller Award for Best Customer Service Organization 2011.

             Hon'ble Minister for Tourism Mr. Subodh Kant Sahai has very graciously consented to honour the event and give away the awards.

            We would appreciate it greatly if you would grace the event and receive the award personally. We await your confirmation.

            The ceremony will be held at The Taj Palace Hotel, Sardar Patel Marg, New Delhi on Tuesday, the 23rd August 2011 at 6.00 pm. Detailed programme will follow.

With best regards,

Kamal Gill (Sd/-)
Executive Editor & Managing Director
Gill India Communications Pvt Ltd
M: +91 9899553300


Courtesy : http://nfpe.blogspot.com/
Related Posts Plugin for WordPress, Blogger...